உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் அருகே நிலத்தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-08-09 07:47 GMT   |   Update On 2022-08-09 07:47 GMT
  • திண்டுக்கல் அருகே நிலத்தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
  • செம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி மேட்டுப்பட்டி அருகே உள்ள செல்லாயிபுரத்தை சேர்ந்தவர் முனீஸ்குமார். இவர் திருப்பூரில் டெய்லராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு பத்மாவதி(30) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

பத்மாவதிக்கும், உறவினர் செல்லபாண்டிக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று செல்லப்பாண்டி, அவரது மனைவி காளியம்மாள் ஆகியோர் பத்மாவதியிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் பத்மாவதியின் தலையில் அரிவாளால் அவர்கள் வெட்டியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த பத்மாவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News