உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் சரக்கு ரெயில் மோதி தொழிலாளி பலி

Published On 2022-11-27 14:46 IST   |   Update On 2022-11-27 14:46:00 IST
  • தூத்துக்குடி கதிர்வேல் நகர் அருகே உள்ள புஷ்பாநகரை சேர்ந்தவர் அருண்குமார், கட்டிடத்தொழிலாளி.
  • மீளவிட்டான்- மடத்தூர் இடையே உள்ள ரெயில்வே தண்டாவாளத்தில் பிணமாக கிடந்தார்

தூத்துக்குடி:

தூத்துக்குடி கதிர்வேல் நகர் அருகே உள்ள புஷ்பாநகரை சேர்ந்தவர் அருண்குமார் ( வயது 28). கட்டிடத்தொழிலாளி.

இவர் இன்று அதிகாலை மீளவிட்டான்- மடத்தூர் இடையே உள்ள ரெயில்வே தண்டாவாளத்தில் பிணமாக கிடந்தார். சம்பவ இடத்திற்கு ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அருண்குமார் இன்று அதிகாலை அவ்வழியாக சென்ற சரக்கு ரெயிலில் அடிப்பட்டு இறந்தது தெரியவந்தது. அவர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்திரு க்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News