உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

நிலக்கோட்டையில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய தொழிலாளி கைது

Published On 2023-10-05 06:36 GMT   |   Update On 2023-10-05 06:36 GMT
  • 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தொழிலாளி மீது அவரது மனைவி மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
  • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் ஜெயராஜ் (வயது 31). இவருக்கும் பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி நேருஜி நகரைச் சேர்ந்த சுகன்யா தேவி (வயது 28) என்பவருக்கும் கடந்த 17.05.2021 ஆம் ஆண்டு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது நகை மற்றும் சீர் வரிசை கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மேலும் 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டதாக நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா விசாரணை செய்து வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய ஜெயராஜ் மற்றும் தாயார் ஜெயலட்சுமி ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ஜெயராஜை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News