உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி.


சாத்தான்குளம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

Published On 2022-06-19 08:03 GMT   |   Update On 2022-06-19 08:03 GMT
  • வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபோகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
  • பரிவார தெய்வங்களுக்கு அஷ்டன பந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.


சாத்தான்குளம்:

சாத்தான்குளம் பஞ்சபிரம்ம அம்பிகை மடம் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 3 நாட்கள் நடைபெற்றது.

முதல்நாள் திருமுறைபாராயணம், மகா கணபதி பூஜை, மகாலட்சுமி பூஜை, அனுக்ஞை, சுதர்சன கும்ப பூஜை, மகாகணபதி ஹோமம்,கன்னிகா பூஜை, சுமங்கலிபூஜை, திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல்,

கும்ப அலங்காரம், முதல் யாகசாலை பூஜை, 2-ம் நாள் விஷேடசந்தி, 2-ம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை, 3-ம்கால யாகசாலை பூஜை, கும்ப பூஜை, 3-ம் நாள் 4-ம்கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம் புறம்பாடு, விமான கோபுர அபிஷேகம், மூலஸ்தான மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டன பந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மகா திரவிய அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. வள்ளி, தெய்வானை ஸக்த ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபோகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. மாலை புஷ்பாஞ்சலி, ஸ்ரீசுப்பிரமணியசுவாமி சப்பரபவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News