உள்ளூர் செய்திகள்
குலசேகரன்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- உடன்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியவர்கள் கைது செய்ய வேண்டும், குலசேகரப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிபாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன் தலைமையில் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
உடன்குடி:
உடன்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியவர்களை கைது செய்ய கூறியும், இதைத் தொடர்ந்து குலசேகரப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிபாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன் தலைமையில் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நிகழ்வில் முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், சுரேந்தர், அந்தோணி, ராவணன், ஒன்றிய செயலாளர் சங்கர் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.