உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவச பூஸ்டர் தடுப்பூசி

Published On 2022-07-31 14:48 IST   |   Update On 2022-07-31 14:48:00 IST
  • ஆகஸ்டு 30-ந் தேதி வரை செலுத்தப்படுகிறது.
  • 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வருகிற ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வரை செலுத்தப்படும்

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வருகிற ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி வரை செலுத்தப்படும் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போது அரசு அறிவித்துள்ளவாறு, இரண்டாம் தவணை செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வருகிற ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வரை செலுத்தப்படும். மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் 84 நாட்கள கழித்தும், முதல் தவணை கோவேக்சின் செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்படவில்லை.

அவ்வாறு நோய் தொற்று உறுதியானாலும் உயிர் சேதம் மற்றும் தீவிர நோய் தொற்று ஏதும் ஏற்படுவதில்லை. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தங்கள் வீட்டையும், சமுதாயத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்துத்துறை அலுவ லர்கள், அரசு ஊழியர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலா ளர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்கள் 128 நாட்கள் / 6 மாதம்/ 26 வாரம் கழித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசியினை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்திக்கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News