உள்ளூர் செய்திகள்

பணகுடி புள்ளிமான் மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

Published On 2023-09-07 09:01 GMT   |   Update On 2023-09-07 09:01 GMT
  • பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
  • மாணவ-மாணவிகள் ராதா மற்றும் கிருஷ்ணா வேடமிட்டு நடனமாடினர்.

வள்ளியூர்:

பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் டாக்டர் தேவிகா பேபி தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி டாக்டர் பொன் லட்சுமி முன்னிலை வகித்தார். இதில் மாணவ-மாணவிகள் ராதா மற்றும் கிருஷ்ணா வேடமிட்டு நடனமாடினர். மாணவ-மாணவிகள் வண்ண மலர் கொத்துக்களை ஆசிரியர் களுக்கு வழங்கி ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News