உள்ளூர் செய்திகள்
கொள்ளிடம் ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்
- இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி பெண்கள் கோஷம் எழுப்பினார்கள்.
- விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமான சலவை தொழிலாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
திருச்சி:
கொள்ளிடம் அழகிரிபுரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு ரூ.7 கோடியில் கட்டிய தடுப்பணை சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக சலவை தொழில் செய்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சலவை தொழிலாளர்களுக்கு தடுப்பு சுவர், படித்துறை கட்டி தர கோரியும், காவிரியுடன் அய்யாற்றை இணைக்க வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தப்பட்டது.
இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி பெண்கள் கோஷம் எழுப்பினார்கள். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமான சலவை தொழிலாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.