உள்ளூர் செய்திகள்

கொளஞ்சியப்பர் கோவில் துப்புரவு பணியாளர் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து பலி

Published On 2023-10-13 09:10 GMT   |   Update On 2023-10-13 09:10 GMT
  • இந்நிலையில் கோவில் கோபுரம் மீது ஏறி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
  • இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கடலூர்:

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் திரு கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இங்கு ராமதாஸ் (வயது 50), துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கோவில் கோபுரம் மீது ஏறி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராமதாசை, விருத்தாசலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News