உள்ளூர் செய்திகள்

மண்டைக்காடு அருகே கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-11-03 08:04 GMT   |   Update On 2023-11-03 08:04 GMT
  • அவர் மாயமான குறித்து மண்டைக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
  • தனிஷா குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.

மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு அருகே உள்ள கோவிலான் விளை யை சேர்ந்தவர் ஜாண்சன். டெம்போ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் தனிஷா(வயது 19) பக்கத்து ஊரிலுள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று வழக்கம்போல் காலை கல்லூரிக்கு செல்ல வீட்டிலிருந்து தனிஷா புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. மாலை வெகு நேரமாகியும் வீட்டிற்கும் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடினர். ஆனால் தனிஷா குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.ஆகவே அவர் மாயமான குறித்து மண்டைக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி யை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News