உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.


சங்கரன்கோவிலில் கிருபானந்த வாரியார் பிறந்தநாள் விழா

Published On 2022-08-26 09:02 GMT   |   Update On 2022-08-26 09:02 GMT
  • மறைந்த ஆன்மீக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியாரின் 116-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்தது.
  • நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டு கிருபானந்த வாரியாரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம் மற்றும் செங்குந்தர் அபிவிருத்தி சங்கம் சார்பில் மறைந்த ஆன்மீக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியாரின் 116-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்தது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க துணைத் தலைவரும், செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளருமான மாரிமுத்து தலைமை தாங்கினார். செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவர் சங்கரசுப்பிரமணியன், பொருளாளர் குருநாதன், துணைச் செயலாளர் சுப்பிரமணியன், முப்புடாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கிருபானந்த வாரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அனைத்து நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் மாரிச்சாமி, செல்வராஜ், ராஜாஆறுமுகம், புஷ்பம், முத்துமாரிபிரகாஷ், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சங்கரசுப்பிரமணியன், மாரிச்சாமி, முத்துலட்சுமி, தி.மு.க. நகர நிர்வாகிகள் மாரிசாமி, பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன், செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், சுப்பிரமணியன், முத்தையா, மற்றொரு சுப்பிரமணியன், சிவராமன், ஆறுமுகம் மற்றும் மாரிமுத்து, மாரியப்பன், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செங்குந்த முன்னேற்ற சங்க தலைவர் கந்தவேல், செயலாளர் செல்வ கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News