உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் பள்ளிக்கு சென்ற பிளஸ்-1 மாணவி கடத்தல்

Published On 2023-09-14 09:13 GMT   |   Update On 2023-09-14 09:13 GMT
  • திருமணஆசை காட்டி கடத்தி சென்ற வாலிபர்
  • பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

கோவை,

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சிறுமுகை ரோட்டை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதி யில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று காலை மாணவி வழக்கம் போல தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து மாணவியின் பெற்றோர் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாணவி பள்ளிக்கு செல்லும் போது சுரேஷ் என்ற வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவர் மாணவியை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.

சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு புறப் பட்டு சென்று கொண்டு இருந்த போது அவரை பின் தொடர்ந்து சென்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரது மோட்டார் சைக்கிளில் மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் வாலிபர் மாணவியுடன் எங்கு உள்ளார் என தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News