உள்ளூர் செய்திகள்
கீரணத்தம், இடிகரையில் நாளை மின்நிறுத்தம்
- கோவை கீரணத்தம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- சேரன்மாநகர் ரோடு, விளாங்குறிச்சி ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நாளை மின்வினியோகம் இருக்காது.
கோவை:
கோவை கீரணத்தம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கீரணத்தம், வரதைய்யங்கர்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி ஒரு பகுதி, விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி ஒரு பகுதி, சிவானந்தபுரம், சத்தி ரோடு,
சங்கராவீதி, ரவிதியேட்டர், விநாயகபுரம், எல்.ஜி.பி.நகர், உதயாநகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கன்னி நகர், சாவித்திரி நகர், கணபதிமாநகர், குறிஞ்சி நகர், சேரன்மாநகர் ரோடு, விளாங்குறிச்சி ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.