உள்ளூர் செய்திகள்

காட்டெருமை முட்டியதில் சேதம் அடைந்த பஸ்.

காட்டெருமை மோதி அரசு பஸ் சேதம்- பயணிகள் அலறியடித்து ஓட்டம்

Published On 2022-06-21 10:54 GMT   |   Update On 2022-06-21 10:54 GMT
  • ஏற்காட்டில் காட்டெருமை மோதி அரசு பஸ் சேதம் அடைந்தது.
  • இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

ஏற்காடு:

ஏற்காடு பஸ் நிலையத்திலிருந்து இருந்து நேற்றிரவு 9 மணி அளவில் அரசு பஸ் சுமார் 20 பயணிகளுடன் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் செந்தில்குமார் ஓட்டினார்.

பஸ் ஏற்காட்டில் உள்ள தனியார் எஸ்டேட் அருகில் வந்து கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பார்க்காத வகையில் காட்டெருமை ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது.

இதை எதிர்பார்க்காத டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதனால் அந்த காட்டெருமை பஸ்சின் முன்பக்கத்தில் மோதியது. மோதிய வேகத்தில் காட்டெருமை காட்டுக்குள் ஓடிவிட்டது.

இந்த சம்பவத்தில் பஸ்சின் முன்பக்கம் மற்றும் கண்ணாடி பலத்த சத்தத்துடன் உடைந்து சுக்கு நூறாக உடைந்தது. பஸ்சில் இருந்த பயணிகள்ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதாக கருதி பதற்றத்துடன் கீழே இறங்கி ஓடினர்.

அதன்பிறகே பஸ்சில் காட்டெருமை மோதிய விவரம் பயணிகளுக்கு தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. 

Tags:    

Similar News