உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு

Published On 2023-10-26 14:15 IST   |   Update On 2023-10-26 14:15:00 IST
  • புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு
  • குழந்தைசாமி (85) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலாயுதம்பாளையம்,  

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்கு சாலை பங்களா நகர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பெட்டிக்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த பான் மசாலா, குட்கா மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, குழந்தைசாமி (85) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News