உள்ளூர் செய்திகள்

மதுபோதையில் கிணற்றில் குதித்த வாலிபர் சாவு

Published On 2023-10-11 11:55 IST   |   Update On 2023-10-11 11:55:00 IST
  • கரூர் பசுபதிபாளையம்கிணற்றில் குதித்த வாலிபர் சாவு
  • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 கரூர்,  

கரூர் பசுபதிபாளையம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சூர்யா(வயது 24). தனியார் நிறுவன ஊழியர்.

இவரது மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் மதுபோதையில் இருந்த சூர்யா அப்பகுதியில் இருந்த ஒரு கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது மேலேயிருந்து கிணற்றுக்குள் குதித்துள்ளார். மது போதையில் இருந்ததால் அவரால் நீந்த முடியாமல் மூச்சு திணறி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News