உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் 2 பேர் காயம்

Published On 2023-10-26 08:47 GMT   |   Update On 2023-10-26 08:47 GMT
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே வாகன விபத்தில் 2 பேர் காயம்

வேலாயுதம்பாளையம்,  

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே பழமாபுரம் காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (47). கூலி தொழிலாளி. இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த தஞ்சாவூர் பழைய நெல்லு மண்டித்தெருவை சேர்ந்த புருஷோத்தமன் இவர் மீது மோதினார்.

இதில் இருவரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News