உள்ளூர் செய்திகள்

புகழூர் நகராட்சி பகுதிகளில் 120 கண்காணிப்பு கேமிரா

Published On 2023-09-30 06:32 GMT   |   Update On 2023-09-30 06:32 GMT
  • ரூ.36 லட்சம் செலவில் நகராட்சி பகுதிகளில் 120 கண்காணிப்பு கேமிரா
  • கேமிரா அமைக்கும் பணிக்கான பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தனர்.

வேலாயுதம்பாளையம் 

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் 40 இடங்களில் 120 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதற்கான பணி தொடக்க விழாவிற்கு புகழூர் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன், புகழூர் நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் மலர்கொடி வரவேற்றார். புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, புகழூர் ஈஜடி பாரி சர்க்கரை ஆலையின் துணைப் பொது மேலாளர்(இயக்கம்) தர்மலிங்கம், மேலாளர் (மனித வளம் )தனபால், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு கேமிரா அமைக்கும் பணிக்கான பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் நகராட்சி மேற்பார்வையாளர் ரவி, நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News