உள்ளூர் செய்திகள்

மது விற்ற 11 பேர் கைது

Published On 2023-10-10 12:12 IST   |   Update On 2023-10-10 12:12:00 IST
  • வாங்கல், மாயனுார், சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • 92 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கரூர். 

கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரதியா சுரேஷ் உள்ளிட்ட போலீசார் குளித்தலை, தோகமலை, வாங்கல், மாயனுார், சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக செல்வராஜ் (வயது 42), காமராஜ் (54), குமார் (45), மற்றொரு குமார் (21), மாரிமுத்து (52), ராஜ்குமார் (37), குருவித் பீவி (65), கோவிந்தராஜ் (64), காமராஜ் (42), தெய்வீகன் (33), தமிழரசன் (26), உள்பட, 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 92 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News