உள்ளூர் செய்திகள்
- ரெங்கபாளையத்தில் மது விற்ற பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.
- அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் பெண் ஒருவர் வீட்டில் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பெண்ஒருவர் வீட்டில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பெரிய ரெங்கம்பாளையம் பகுதியைச்சேர்ந்த வளர்மதி (52) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.