- கரூர் புன்னம்சத்திரம் கிராமத்தில் பெண்களை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
- வேலாயுதம்பாளையம் போலீசார் நடவடிக்கை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 45). இவரது மனைவி லட்சுமி (39). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் லட்சுமியின் வீட்டின் முன்பு பெரிய ரெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கமலேஷ் (30). என்பவர் (கூலி தொழிலாளி). அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது பெட்டி கடை வைத்து நடத்திவரும் லட்சுமி இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். இதனால் கமலேஷ், லட்சுமி மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் லட்சுமி பெட்டிக் கடையில் இருந்த போது அங்கு வந்த கமலேஷ் லட்சுமியை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
அப்போது லட்சுமியின் கணவர் மாதேஷ் கமலேஷிடம் தேவையற்ற முறையில் தகராறில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது லட்சுமி சகோதரி சித்ரா அந்த பகுதிக்கு வந்து இருவரையும் தகராறில் ஈடுபட வேண்டாம் என கூறி உள்ளார்.இதில் ஆத்திரம் அடைந்த கமலேஷ் மாதேஷ் மற்றும் சித்ரா ஆகியோரை கீழே தள்ளிவிட்டு தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இதில் மாதேஷ் மற்றும் சித்ரா ஆகியோர் காயம் அடைந்துள்ளனர்.உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் இருவரையும் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து லட்சுமி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட கமலேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்