உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்

Published On 2022-06-09 08:03 GMT   |   Update On 2022-06-09 08:03 GMT
  • பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • நகர பேருந்தையும் சிறைபிடித்தனர்

கரூர்:

நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்து, பேருந்தை சிறைப்பிடித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம் பழையஜெயங்கொண்டம் பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அத்தொழிலாளர்களுக்கு மிக குறைந்த ஊதியமே வழங்கப்படுவதாக்கூறி பழையஜெயங்கொண்டம் பேரூராட்சி அலுவலகத்தை புதுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, ஓமாந்தூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் குளித்தலையில் இருந்து பழையஜெயங்கொண்டம் வந்த அரசு நகரப்பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சதுர அடியை கணக்கிட்டு ஊதியம் வழங்கப்பட்டதாகவும் அதில் முறைகேடு எதுவும் இல்லை. சம்பளத்தை குறைக்கவில்லை எனக்கூறியதை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Tags:    

Similar News