உள்ளூர் செய்திகள்
களைக்கொல்லி மருந்து குடித்து பெண் உயிரிழப்பு
- கரூர் அருகே களைக்கொல்லி மருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
முசிறி,
கரூர் அருகே முசிறி நடராஜ் நகரை சேர்ந்த பானுமதி(வயது 45).இவரது கணவன் நடேசன் ஆறு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு துக்கம் தாளாமல் விரக்தியில் இருந்து வந்தவர் திடீரென களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். இதனை அறிந்த மகன் பாலமுருகன்(23) தனது தாய் பானுமதியை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ,அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் முசிறி சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.