உள்ளூர் செய்திகள்

டெக்ஸ்டைல் நிறுவன உரிமையாளர் தற்கொலை

Published On 2023-05-16 11:50 IST   |   Update On 2023-05-16 11:50:00 IST
  • டெக்ஸ்டைல் நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்
  • 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிபட்டு வந்தவர் தற்கொலை

கரூர்,

கரூர் ஆண்டாங்கோவில் புதூரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 47). தொழிலதிபரான இவர், கரூரில் சொந்தமாக டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக பன்னீர்செல்வம் வயிற்று வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனால் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகவில்லைஎன கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பன்னீர்செல்வம் சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கினார்.இதைக்கண்ட உறவினர்கள் பன்னீர்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள். இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாத வடிவேல் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News