உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்ெகாலை

Published On 2023-09-01 11:20 IST   |   Update On 2023-09-01 11:20:00 IST
  • வாலிபர் தூக்குப்போட்டு தற்ெகாலை ெசய்து ெகாண்டனர்.
  • மது குடிக்க பணம் தராததால்

கரூர் :

கரூர் திருமாநிலையூரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 37). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று அய்யப்பன் தனது மனைவியிடம் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த அய்யப்பன் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அய்யப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News