உள்ளூர் செய்திகள்

ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த தொழிலாளி

Published On 2022-08-13 14:15 IST   |   Update On 2022-08-13 15:53:00 IST
  • ரெயில்வே தண்டவாளத்தில் தொழிலாளி பிணமாக கிடந்தார்
  • கொலை? போலீஸ் விசாரணை

கரூர்:

கரூர் மாவட்டம் வெங்கமேடு அருகே குளத்துப்பாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் வெங்கமேடு வி.வி.ஜி. நகரை சேர்ந்த சவுந்தராஜன் என்பதும், இவர் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணி செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். பின்னர் சவுந்தராஜன் உடலை கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசர் வழக்கு பதிந்து, சவுந்தராஜன் தற்கொலை செய்து கொண்டாரா? யாராவது கொலை செய்து தண்டவாளத்தில் வீசி சென்றனரா? த ண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News