உள்ளூர் செய்திகள்

கரூர் முதல் வீரராக்கியம் வரை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு

Published On 2023-01-27 12:15 IST   |   Update On 2023-01-27 12:15:00 IST
  • கரூர் முதல் வீரராக்கியம் வரை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்
  • ரிங் பணிகள் நிறைவு பெற்றதும் கரூர்-திருச்சி ஒன்றரை மணி ேநரத்தில் சென்று வர வசதியாக இருக்கும்.

கரூர்:

கரூர்-திருச்சி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கரூர் முதல் வீரராக்கியம் வரை இடங்கள் தேர்வு செய்து கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கரூர் அருகில் நகரும் நடை பாதை விரைவில் துவங்க உள்ளது.

ரிங் ரோடுகள் 60 அடி அகலம், 29 கிலோமீட்டர் நீளம் போடப்படுகிறது. இந்த ரிங் பணிகள் நிறைவு பெற்றதும் கரூர்-திருச்சி ஒன்றரை மணி ேநரத்தில் சென்று வர வசதியாக இருக்கும். அதன்படி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகர், கரூர் கோட்டத்திற்குட்பட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் வளர்மதி, கோட்ட பொறியாளர் ரவிக்குமார், கரூர் நெடுஞ்சாலைத்துறை துணை பொறியாளர் கர்ணன் மற்றும் மேற்பார்வையாளர்கள் உடன் சென்றனர்.


Tags:    

Similar News