தென்னை மரத்தில் மோதி மாணவர் பலி
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் மரவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (60). இவரது மகன் கிஷோர் (13). இவர் வேட்டமங்கலம் பி.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வேலாயுதம்பாளையம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் நொய்யல்- வேலாயுதம் பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சேமங்கி அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி தார் சாலையின் ஓரத்தில் இருந்த தென்னை மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கிஷோருக்கு மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கிஷோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிஷோரின் தாய் மணிமேகலை வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.