உள்ளூர் செய்திகள்

பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம்

Published On 2023-06-20 07:46 GMT   |   Update On 2023-06-20 07:46 GMT
  • அமைச்சர் செந்தில் பாலாஜி நலம் பெற வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது
  • மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது

கரூர்,

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம் பெற வேண்டி அவரது ஆதரவாளர்கள் நாள்தோறும் பூஜைகள் செய்வது, நேர்த்தி கடன் செலுத்துவது என பல வேண்டுதல்களை செய்து வருகின்றனர்.அந்த வரிசையில் இன்று மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பரணி பால்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. யாகத்தை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதில் அறங்காவலர் குழுவினருடன், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மண்டல தலைவர், கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். மேலும் நெரூர் சிவன் கோவிலில் மாவட்ட துணை செயலாளர் எம்.எஸ்.கே. கருணாநிதி தலைமையில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

Similar News