உள்ளூர் செய்திகள்

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2022-10-23 10:42 IST   |   Update On 2022-10-23 10:42:00 IST
  • சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
  • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்

கரூர்

வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பு காசிவிஸ்வநாதர் கோவிலில் உள்ள நந்திபகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நஞ்சை புகழூரில் உள்ள மேக பாலீஸ்வரர்கோவிலில் ஜப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தாா்

நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News