உள்ளூர் செய்திகள்

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-11-13 12:53 IST   |   Update On 2023-11-13 12:53:00 IST
  • ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
  • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது

வேலாயுதம்பாளையம், 

ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரிஅம்மன் கோவிலில் அங்காள பரமேஸ்வரிஅம்மனுக்கு பால் ,தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் விபூதி தேன் கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் .இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரிஅம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது .

அதேபோல் வேலாயுதம்பாளையம் மகா மாரியம்மன் கோவில், நானப்பரப்பு மாரியம்மன் கோவில், தளவா பாளையம் மாரியம்மன் கோவில், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில்,சேமங்கி மாரியம்மன் கோவில், நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை கோவில், நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில், புன்னம் மாரியம்மன் ,பேரூர் அம்மன் கோவில்,திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை கோவில், மாரியம்மன் கோவில், நன்செய் புகளூர் பத்ரகாளி கண்டியம்மன் கோவில்,அத்திப்பாளையம் பொன்னாச்சிஅம்மன், உப்பு பாளையம் மாரியம்மன்,புன்னம் மாரியம்மன் ,பகவதி அம்மன், பேரூர்அம்மன், தவுட்டுப்பாளையம் மாரியம்மன் ,பகவதி அம்மன், , குந்தாணி பாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மன், மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்கள் மற்றும் குலதெய்வ கோயில்களில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் குடிப்பாட்டு மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News