உள்ளூர் செய்திகள்

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-01-21 12:10 IST   |   Update On 2023-01-21 12:10:00 IST
  • அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
  • சுவாமிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
கரூர்


கரூர் மாவட்டம், திருக்காடுதுறையில் மாதேஸ்வரி அம்பிகை கோவில் உள்ளது. இங்கு தை மாத முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல், தவிட்டுப்பாளையம், திருக்காடுதுறை, புன்னம், உப்புபாளையம் கரியாம்பட்டி, சேமங்கி மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.


Tags:    

Similar News