உள்ளூர் செய்திகள்

சிறப்பு மனு விசாரணை முகாம்

Published On 2023-03-30 07:07 GMT   |   Update On 2023-03-30 07:07 GMT
  • கரூர் போலீசார் சார்பில் நடைபெற்றது
  • 101 மனுக்கள் பெறப்பட்டு 51 மனுக்களுக்கு தீர்வு

கரூர், 

கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், சிறப்பு மனு விசாரணை முகாம், தான்தோன்றிமலையில், தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. முகாமை கரூர் எஸ். பி. சுந்தரவதனம் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, புகார்தாரர் மற்றும் எதிர் மனுதாரர்களிடம், ஸ்டேஷன் வாரியாக போலீசார் விசாரணை மற்றும் குறைகளை கேட்டறிந்தனர். இறுதியாக, 101 மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, 51 மனுக்கள் மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது.முகாமில், ஏ.டி.எஸ்.பி., கண்ணன், டி.எஸ்.பி.,க்கள் சரவணன், முத்தமிழ் செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Tags:    

Similar News