- சகோதரிகள் சண்டையில் விபரீத முடிவு
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
கரூர்,
கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள மருதம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் சின்ராசு (வயது 43). கூலித் தொழிலாளி. இவரின் மகள்கள் பவானி (17), சுபிக்ஷா (11). இதில், சுபிக்ஷா, அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சின்ராசு தனது மனைவியுடன் வேலைக்கு சென்று வரும் நிலையில், வீட்டில் இருக்கும் சகோதரிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதே போல பவானிக்கும், சுபிக்ஷாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த சுபிக்ஷா, பவானி வெளியே சென்ற நேரம் பார்த்து, வீட்டுக்குள் சென்று, புடவையை பேனில் மாட்டி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பெற்றோர்புகாரின் பேரில், வெள்ளியணை போலீசார், சிறுமியின் உடலை மீட்டு மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.