உள்ளூர் செய்திகள்

ஆதரவின்றி சுற்றி திரிந்த 19 பேர் மீட்பு

Published On 2022-12-07 10:14 GMT   |   Update On 2022-12-07 10:14 GMT
  • கரூர் மாவட்டத்தில் ஆதரவின்றி சுற்றி திரிந்த 19 பேர் மீட்பு
  • கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு, தனியார் காப்பகங்களில் சேர்க்க ப்பட்டனர்.

கரூர்,

கரூர், குளித்தலை பகுதிகளில் வசிப்பிடம், ஆதரவின்றி கோவில், பஸ் நிலையத்தில் , சாலையோரம் தங்கி யாசகம் பெற்று சுற்றிக்கொண்டிருந்த, 19 பேரை போலீசார் மீட்டு விசாரணை செய்தனர். அவரில் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு, தனியார் காப்பகங்களில் சேர்க்க ப்பட்டனர்.

இது போன்று ஆதரவின்றி உள்ள நபர்களை பிச்சை எடுக்க வைத்து, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், யாராவது செயல்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News