உள்ளூர் செய்திகள்

குளித்தலை நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் நியமிக்க கோரிக்கை

Published On 2023-05-26 06:42 GMT   |   Update On 2023-05-26 06:42 GMT
  • குளித்தலை நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் நியமிக்க கோரிக்கை வைத்தனர்
  • இதற்கு கரூர் மாவட்ட தலைமை கூட்டுறவியல் நீதிபதி இது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலை நீதிமன்ற ஒருங்கிணைந்த வளாகத்திலுள்ள குற்றவியல் நடுவர் எண் 2 நீதிமன்றத்தின் வருடாந்திர ஆய்விற்கு வருகை புரிந்த கரூர் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி ராஜலிங்கம் நீதிபதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் நாகராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் அவர்களின் குறை, நிறைகள் குறித்து கூறினர்.

தொடர்ந்து வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் இணைச் செயலாளர் மது பேசியது: குளித்தலையில் அமைந்துள்ள இரு குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் 2 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், கூடுதல் உரிமையியல் நீதிபதி பொறுப்பு நீதிபதியாக இருந்து வருகிறார். குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு முழு நேரமாக நீதிபதியை நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு கரூர் மாவட்ட தலைமை கூட்டுறவியல் நீதிபதி இது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.இதற்கு வழக்கறிஞர்கள் அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர். முடிவில் வழக்கறிஞர்கள் சங்க இணைச் செயலாளர் பிள்ளபாளையம் சரவணன் நன்றி கூறினார். இதில் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News