உள்ளூர் செய்திகள்
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் பேரணி
- சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் பேரணி நடைபெற்றது
- 75ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்ட நடந்தது
கரூர்:
கரூரில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் பேரணியாக சென்றனர். 75ம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, கரூர் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் அவினாசிலிங்கம் தலைமையில் கரூர் ஆசாத் பூங்காவிலிருந்து ஜவஹர் பஜார் வழியாக காமராஜர் சிலை வரை நேற்று பேரணியாக சென்றனர். இதில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கலந்து கொண்டனர்.