உள்ளூர் செய்திகள்

ராகுல் பிறந்த நாள் கொண்டாட்டம்

Published On 2023-06-20 13:04 IST   |   Update On 2023-06-20 13:04:00 IST
  • கரூரில் காங்கிரஸ் சார்பில் ராகுல் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது
  • ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

கரூர், 

ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன் தலைமையில் வெள்ளியணையில் உள்ள ராகவேந்திரா அறக்கட்டளையில் படிக்கின்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.அதேபோல செல்லாண்டிபட்டி ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு மாணவர் காங்கிரஸின் மாநில செயலாளர் சசிகுமார் சார்பாக நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, ரப்பர், ஸ்கேல் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சில் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணை தலைவர் சின்னையன், நாகேஸ்வரன், முன்னாள் நகர தலைவர் சுப்பன், சனப்பிரட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் முத்துசாமி, பரமசிவம், செல்வராஜ், வெள்ளியணை பத்மநாபன் மற்றும் பரமத்தி வட்டார காங்கிரஸ் கமிட்டி துனைத் தலைவர் விசுவை செந்தில், வெள்ளியணை லோகநாதன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.இதே போல் கரூர் வெங்கமேடு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றி ஐயப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து லைட் ஹவுஸ் காந்தி சிலை மற்றும் தான்தோன்றி மலை பேருந்து நிறுத்தத்தில் கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையேற்று கொடி ஏற்றினார். கரூர் மாநகராட்சியின் 9-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு, மாநகர தலைவர் வெங்கடேஸ்வரன், மாவட்ட சேவாதள தலைவர் தாந்தோணி குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்.இந்த நிகழ்ச்சியில் கிழக்கு நகர தலைவர் சண்முகசுந்தரம், மாநகர துணை தலைவர் கண்ணப்பன், மாவட்ட துணை தலைவர் ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளர் மெய்ஞான மூர்த்தி நிர்வாகிகள் சரவணன், பாலமுருகன், சண்முகம், குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கோகுலே, பரமத்தி நல்ல சிவம், எஸ்சி எஸ்டி பிரிவு முனீஸ்வரன், ரவிச்சந்திரன், முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News