உள்ளூர் செய்திகள்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Published On 2022-06-06 10:17 GMT   |   Update On 2022-06-06 10:45 GMT
  • உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • டி.என்.பி.எல்.நிறுவனத்தில் நடைபெற்றது

கரூர் :

கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், உலக புகையிலை ஒழிப்பு தினம் உறுதிமொழி நிகழ்ச்சி தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனவளாகத்தில் அமைந்துள்ள கால அலுவலகத்தில் நடைபெற்றது.

உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் பொது மேலாளர் சுரேஷ்(மனிதவளம்), துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் (பாதுகாப்பு), உதவி பொது மேலாளர் சரவணன் (எலக்ட்ரிக்கல்), முதுநிலை மேலாளர் சிவக்குமார் (மனிதவளம்), துணை மேலாளர்கள் சங்கர்,

வெங்கடேஷன் (மனிதவளம்) ஆகியோர் தலைமையில் தமிழ்நாடுசெய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியை சமூக இடைவெளியை கடை பிடித்து எடுத்துக்கொண்டனர்.


Tags:    

Similar News