உள்ளூர் செய்திகள்

மருந்தாளுநர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-09 09:53 GMT   |   Update On 2022-08-09 09:53 GMT
  • மருந்தாளுநர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • கட்டாய பணி மாறுதலை கைவிட கோரி நடந்தது

கரூர்:

கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் ஆர்.சுரேஷ்குமார் தலைமையில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்டாய பணி மாறுதலை கைவிட கோரி கோஷங்கள் எழுப்பினர்.

மாவட்டச் செயலாளர் எம்.சக்திவேல் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் பொன்.ஜெயராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நிர்வாகிகள், மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் பணி நேரம் மாற்றப்பட்டதை கண்டித்து கரூரில் அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். அரசு டாக்டர்களின் பணி நேரம் காலை 9 மணி என்பதற்கு பதிலாக காலை 8 மணி என மாற்றிய மாநில அரசை கண்டித்து, கரூர் மாவட்ட அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள், அரசு டாக்டர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News