உள்ளூர் செய்திகள்
குளித்தலை அருகே - சேவல் சண்டை நடத்திய 2 பேர் கைது
- கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வை.புதூர் வாய்க்கால் கரையில் சேவல் சண்டை நடப்பதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வை.புதூர் வாய்க்கால் கரையில் சேவல் சண்டை நடப்பதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்ட குளித்தலை எலிமெண்டரி ஸ்கூல் தெருவை சேர்ந்த சிலம்பரசன் (வயது 31), மருதூர் குடித்தெருவை சேர்ந்த லோகேஷ் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.