உள்ளூர் செய்திகள்

அய்யம்பாளையத்தில் மோட்டார் ஒயர் திருட்டு

Published On 2023-08-30 14:59 IST   |   Update On 2023-08-30 14:59:00 IST
  • கரூர் குளித்தலை அடுத்த அய்யம்பாளையத்தில் மோட்டார் ஒயர் திருட்டு சம்பவம் நடந்துள்ளது
  • 70 மீட்டர் மின் ஒயர் காணாமல் போனது குறித்து பாலவிடுதி போலீசார் விசாரணை

கரூர்,

குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன், குத்தவாச்சேரி அண்ணா நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 35). கூலி தொழிலாளி. இவர் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் தோட்டத்தில், அய்யம்பாளையத்தில் உள்ள தெற்கு களத்தில் தங்கி வேலை செய்து வந்தார். தோட்டத்தில் உள்ள மோட்டார் ஒயர், கடந்த, 25ம் தேதி வெளிப்புறமாக இருந்துள்ளது. வேலை முடிந்து விட்டு, 27ம் தேதி மதியம் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்றபோது. 70 மீட்டர் மின் மோட்டார் ஒயர் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஆனந்தராஜ் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News