உள்ளூர் செய்திகள்

கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-06-08 06:49 GMT   |   Update On 2023-06-08 06:49 GMT
  • கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
  • இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் :

கரூர் தெற்கு காந்திகிராமம் ஈ.பி. காலனியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (51). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக தனியாக வசித்து வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்ட ராஜமாணிக்கம் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜமாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News