உள்ளூர் செய்திகள்

ஒட்டப்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-11-08 13:18 IST   |   Update On 2022-11-08 13:18:00 IST
  • ஒட்டப்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் ேகாவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

கரூர்

வாங்கப்பாளையம், 3 எல்லையில் ஒட்டப்பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் யாகசாலையில் முதல் கால பூஜை, 2-ம் கால பூஜை, 3-ம் கால பூஜை, 4-ம் கால பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் ேகாவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர் ஒட்டப்பிள்ளையார் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News