உள்ளூர் செய்திகள்

3 திருடர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்த கரூர் போலீசார்

Published On 2023-10-31 14:14 IST   |   Update On 2023-10-31 14:14:00 IST
  • சந்தேகத்திற்கு இடமான மூன்று பேர் போலீசை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் வேமோக சென்றனர்.
  • அவர்களை சோதனையிட்ட போது கத்தி போன்ற பயங்கர ஆயுதம் வைத்திருந்தது தெரிய வந்தது

கரூர்

கரூர் அருகே பசுபதிபாளையம் பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர், அப்போது, சந்தேகத்திற்கு இடமான மூன்று பேர் போலீசை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் வேமோக சென்றனர். சந்தேமேடைந்த போலீசார் அவர்களை விரட்ட தொடங்கினர். அப்போது, மூன்று பேரும் கரூரில் இருந்து திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி நோக்கி வேமோக சென்றனர். அரவக்குறிச்சி போலீசுக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.

அவர்களை பின் தொடர்ந்து ரோந்து போலீசார், போக்குவரத்து போலீசார் சென்றனர். அரவக்குறிச்சி அருகே நாமே்பள்ளி பிரிவு அருகே, அரவக்குறிச்சி போலீசார் மூன்று பேர் வந்த இரு சக்கர வாகனத்தை மடக்கி பிடித்தனர். அவர்களை சோதனையிட்ட போது கத்தி போன்ற பயங்கர ஆயுதம் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ரவி (வயது 20), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (26), திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தாலிக்ராஜ் (28) என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் செயின் பறிப்பு, இரு சக்கர வாகன திருட்டு என பல குற்றங்களில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது. அவர்களை கைது செய்த கரூர் நகர போலீசார் அவரிகளிடம் இருந்த கத்தி, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News