வரும் தேர்தல்களில் தே.மு.தி.க. தவிர்க்க முடியாத சக்தியாக திகழும் - விஜயபிரபாகரன் உறுதி
- வரும் தேர்தல்களில் தே.மு.தி.க. தவிர்க்க முடியாத சக்தியாக திகழும் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
- கரூரில் நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்றார்
கரூர்:
2024 மற்றும் 2026ம் ஆண்டு தேர்தல்களில் தே.மு.தி.க. தவிர்க்க முடியாத சக்தியாக திகழும்
என விஜயபிரபாகரன் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட விஜயபிரபாகரன் பேசியதாவது:
ஒரு ஓட்டுநர் வேலைக்குக்கூட தகுதி, திறமை குறித்த ஆலோசித்த பிறகு பணியை வழங்குகின்றனர். நாட்டை ஆளும் அரசியல்வாதிகளுக்கு என்ன அனுபவம், தகுதி, திறமை உள்ளது என்பதை மக்கள் ஆராய்ந்து பார்த்து அரசியலில் வாய்ப்பு வழங்கவேண்டும். சாதாரண தொண்டனாக உங்கள் முன்னால் நிற்பதற்கு தயாராக இருக்கிறேன். நீங்கள் சரியான நபர் யார் என்று சிந்தித்து அவர்கள் பின்னால் நிற்கவேண்டும்.
வரும் 2024ம் நாடாளுமன்ற தேர்தல், வரும் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் தே.மு.தி.க. இடம் பெறும் கூட்டணியே வெற்றிப்பெறும் நிலையை நீங்கள் ஏற்படுத்தவேண்டும். இத்தேர்தல்களில் தே.மு.தி.க. தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் என்றார்.