உள்ளூர் செய்திகள்

கரூரில் சாரல் மழை

Published On 2023-07-03 12:05 IST   |   Update On 2023-07-03 12:05:00 IST
  • கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் சாரல் மழை பெய்தது
  • குளிர்ந்த மழை பொழிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், பாலத்துறை, தவிட்டுப்பாளையம், நன்செய்புகளூர், கட்டிபாளையம், திருக்காடுதுறை, கரைப்பாளையம், கொங்கு நகர், ஆலமரத்து மேடு, அண்ணா நகர், காந்தி நகர், காகிதபுரம், பேச்சிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென பலத்த காற்று, பலத்த இடி, மின்னலுடன் லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து வாட்டி வந்த கடும் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், சாரல் மழையின் காரணமாக குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

Similar News