உள்ளூர் செய்திகள்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-29 04:08 GMT   |   Update On 2023-03-29 04:08 GMT
  • கரூர் தபால் நிலையம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது

கரூர்,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சடையாண்டி துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் தாமோதரன் கோரிக்கை குறித்து பேசினார். மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணன், மாநில செயலாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.சாலை பராமரிப்பு ஊழி யர்கள் சங்க மாநில நிர்வாகி குப்புசாமி, வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க நிர்வாகி தனலட்சுமி உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். மகேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News