பேக்கரி கடை உரிமையாளர் வீட்டில் தங்கம், வெள்ளி திருட்டு
- கரூர் பேக்கரி கடை உரிமையாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
- சின்னத்தாராபுரம் போலீசார் விசாரணை
கரூர்,
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள மலர்ச்சியூரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவர் சின்ன தாராபுரத்தில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு பேக்கரிக்கு சென்று விட்டார். மீண்டும் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் உள்ள 4 பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தவை பார்த்து சண்முகம் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சின்னதாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து சின்னதாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் கைரேகை எடுத்து விசாரணை நடத்தியதில் மூன்று பவுன் தங்கச் செயின் மேலும் வெள்ளி கொலுசு, வெள்ளி செயின் காணவில்லை என வீட்டில் உரிமையாளர் கூறினார். இது குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் பட்டப்பகலில் நடந்ததால் சின்னதாராபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.