உள்ளூர் செய்திகள்

கரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-09 12:15 IST   |   Update On 2023-07-09 12:15:00 IST
  • கரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
  • ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார்

கரூர்,

கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததை கண்டித்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். கரூர் மாநகராட்சியின் 9-வது மாமன்ற உறுப்பினரும் கரூர் வடக்கு நகர காங்கிரஸ் தலைவருமான ஸ்டீபன் பாபு முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியம், மாவட்ட சேவாதள தலைவர் தாந்தோண்றி குமார், மாவட்ட துணை தலைவர்கள் கோகுலே, ஜாகிர் உசேன், அரவக்குறிச்சி நகர் மன்ற உறுப்பினர் பஜிலா பானு, நகரத் துணைத் தலைவர்கள் பாலமுருகன், வீரராக்கியம் மாணிக்கம், சுப்பன், ரவி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரத் துணைத் தலைவர் கண்ணப்பன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News